For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

(காவடிச் சிந்தில் அறுமுக வடிவேலனே என்ற மெட்டு)
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உண்ர்ந்திடு
குழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பினளாம் எங்கள் தாய்.(1)


யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள் தாய் - இந்தப்
பாருள் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள் எங்கள் தாய். (2)


முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள்- இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள். (3)


நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடை யாள் - தனை
மேவினார்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள். (4)


அறுபது கோடி தடக்கை களாலும்
அறங்கள் நடத்துவள் தாய்- தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய். (5)


பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுத்
துர்க்கை யனையவள் தாய். (6)


சுற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழு வாள்எங்கள் தாய் - கையில்
ஓற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
ஒருவனை யுந்தொழு வாள். (7)


யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறி வாள் - உயர்
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடை யாள். (8)


நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள்எங்கள் தாய் -அவர்
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடு வாள். (9)


வெண்மை வளரிம யாசலன் தந்த
விறன்மக ளாம்எங்கள் தாய் - அவன்
திண்மை மறையினும் தான்முறை யாள்நித்தஞ்
சீருறு வாள்எங்கள் தாய். (10)

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X