For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ராகம் - ஆபோகி
தாளம் - ரூபகம்
1.பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை
காயழல் ஏந்திய பித்தன் - தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை (பேயவள்)
2.இன்னிசை யாம்இன்பக் கடலில் - எழுந்து
ஏற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள் - அங்குத்
தாவிக் குதிப்பாள்எம் அன்னை. (பேயவள்)
3.தீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில்
தெய்வீக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி - மதுத்
தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)
4.வேதங்கள் பாடுவன் காணீர் - உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்த்
தோதி யுலகெங்கும் விதைப்பாள் (பேயவள்)
5.பாரதப் போரெனில் எளிதோ. - விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வான்
மாரதர் கோடிலந் நாலும் - கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள். (பேயவள்)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]