For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
அக்டோபர் 12, 2001
ஜயம் உண்டு
பல்லவி
ஜயமுண்டு பயமில்லை மனமே! - இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு (ஜய)
அனுபல்லவி
பயணுண்டு பக்தியினாலே - நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை (ஜய)
சரணங்கள்
1. புயமுண்டு குன்றத்தைப் போலே- சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை.
நெறியுண்டு:குறியுண்டு: குலசக்தி வெறியுண்டு (ஜய)
2. மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ
வலியுண்டு தீமையைப் போக்கும்:
விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு:குறைவில்லை
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு . (ஜய)
3. அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி
அருளென்னுந் தோணியினாலே,
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடு பட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]