பாரதி பக்கம்
நாமம் (காம்போதி)
பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய்! - இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு. (1)
நாடு (வசந்தா)
தேனார் மொழிக் கிள்ளாய்! தேவியெனக் கானந்த
மானாள்பொன் னாட்டை அறிவிப்பாய் !- வானொடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி. (2)
நதர் (மணிரங்கு)
இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உ.யிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம். (3)
ஆறு (சுருட்டி)
வன்னக்கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரைப்பாய்! - நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான் போந்த கங்கையென வாழ்த்து (4)
மலை (கானடா)
சோலைப் பசுங்கிளியே தொன்மறைகள் நான்குடையாள்
வாலை வளரும் மலைகூறாய் - ஞாலத்துள்
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு. (5)