For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

திருவேட்கை

மலரின் மேவு திருவே! - உன்மேல்
மையல் பொங்கி நின்றேன்,
நிலவு செய்யு முகமும்! - காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் - தெய்வக்
கலக லென்ற மொழியும் - தெய்வக்
களிது லங்கு நகையும்,
இளகு செல்வ வடிவம் - கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன். (1)


கமல மேவும் திருவே! - நின்மேல்
காத லாகி நின்றேன்
குமரி நின்னை இங்கே பெற்றோர்
கோடி யின்ப முற்றார்
அமரர் போல வாழ்வேன் - என் மேல்
அன்பு கொள்வை யாயின்,
இமய வெற்பின் மோத - நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன். (2)


வாணி தன்னை என்றும் - நின்று
வரிசை பாட வைப்பேன்!
நாணி யேக லாமோ? - என்னை
நன்க றிந்தி லாயோ?
பேணி லைய மெல்லல்லாம் நன்மை
பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம் - கண்ணன்
பொறிக ளாவ ரன்றோ? (3)


பொன்னும் நல்ல மணியும் - சுடர்செய்
பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்றன் வடிவிற் - பணிகள்
மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்ப னேடீ - திருவே!
என்னு யிர்க்ககொ ரமுதே!
நின்னை மார்பு சேரத் - தழுவி
நிக ரிலாது வாழ்வேன். (4)


செல்வ மெட்டு மெய்தி - நின்னாற்
செம்மை யேறி வாழவேன்.
இல்லை என்ற கொடுமை - உலகில்
இல்லை யாக வைப்பேன்,
முல்லை போன்ற முறுவல் - காட்டி
மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே! - எனை நீ
என்றும் வாழ வைப்பாய். (5)

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X