பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஊர்தி (தன்யாசி)
சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரைத்தாய் - தேரின்
பரிமிசை வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்
அரிமிசையே ஊர்வாள் அவள். (6)


படை (முகாரி)
கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்!
செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்? - பொருபவர்மேல்
தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்
திண்ணமுறு வான்குலிசம் தேரு. (7)


முரசு (செஞ்சுருட்டி)
ஆசை மரகதமே! அன்னைதிரு முன்றிவிடை
ஓசை வளர் முரசம் ஓதுவாய்!- பேசுகவோர்
சத்தியமே, செய்க தருமமே என்றொலி செய்
முத்தி தரும் வேத முரசு. (8)


தார் (பிலகரி)
வாராய் இளஞ்சுகமே! வந்திப்பார்க் கென்றுமிடர்
தாராள் புனையுமணித் தார்கூறாய்! - சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
பொற்றா வரைத்தார் புனைந்து. (9)


கொடி (கேதாரம்)
கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! சூத்திரமும் தீங்கும்
துடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார்
மன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி. (10)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+