பாரதி பக்கம்
ஊர்தி (தன்யாசி)
சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரைத்தாய் - தேரின்
பரிமிசை வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்
அரிமிசையே ஊர்வாள் அவள். (6)
படை (முகாரி)
கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்!
செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்? - பொருபவர்மேல்
தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்
திண்ணமுறு வான்குலிசம் தேரு. (7)
முரசு (செஞ்சுருட்டி)
ஆசை மரகதமே! அன்னைதிரு முன்றிவிடை
ஓசை வளர் முரசம் ஓதுவாய்!- பேசுகவோர்
சத்தியமே, செய்க தருமமே என்றொலி செய்
முத்தி தரும் வேத முரசு. (8)
தார் (பிலகரி)
வாராய் இளஞ்சுகமே! வந்திப்பார்க் கென்றுமிடர்
தாராள் புனையுமணித் தார்கூறாய்! - சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
பொற்றா வரைத்தார் புனைந்து. (9)
கொடி (கேதாரம்)
கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! சூத்திரமும் தீங்கும்
துடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார்
மன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி. (10)












Click it and Unblock the Notifications