பாரதி பக்கம்
மார்ச் 20, 2001
சுயசரிதை
சூதி லாத வுளத்தினன் எந்தைதான்
சூழத்தெ னக்கு நலஞ்செயல் நாடியே
ஏதி லாதருங் கல்விப் படுகுழி
ஏறி யுய்தற் கரிய கொடும்பிலம்
நீதி யன்ற மயக்கமும் ஐயமும்
செய்கை யாவினு மேய சிரத்தையும்
வாதும் பொய்மையும் என்றவி லங்கினம்
வாழும் வெங்குகைக் கென்னை வழங்கினன். (27)
ஐய ரென்றும் துரையென்றும் மற்றெனக்
காங்கி க்கலை யென்றொன் றுணர்த்திய
பொய்ய ருக்கிது கூறுவன், கேட்பீரேல்:
பொழுதெ லாமுங்கள் பாடத்தில் போக்கிநான்
மெய்ய யர்ந்து விழிகுழி வெய்திட
வீறி ழந்தென துள்ளநொய் தாகிட
ஐயம் விஞ்சித் சுதந்திர நீங்கியென்
அறிவு வாரித் துரும்பென் றலைந்ததான். (28)
செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது:
தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன:
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்!
சிலமுன் செய்நல் வினைப்பய னாலும்நந்
தேவி பாரதத் தன்னை யருளினும்
அலைவு றுத்துநும் பேரிருள் வீழந்துநான்
அழிந்திடா தொரு வாறுபி ழைத்ததே! (29)












Click it and Unblock the Notifications