பாரதி பக்கம்
மே 20, 2001
5
போடலாமா? போடலாம்.
மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது?
மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா?
உடலைக் கட்டு, உயிரைக் கட்டலாம்,
உ.யிரைக் கட்டு, உள்ளத்தைக் கட்டலாம்.
உள்ளத்தைக் கட்டு, சக்தியைக் கட்டலாம்.
அந்தந்த சக்திக்கு கட்டுப்படுவதிலே வருத்தமில்லை.
என்முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது.
அதற்கு ஒரு வடிவம், ஓரளவு நியமம்
ஏற்பட்டிருக்கின்றது.
இந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று
காத்துக் கொண்டிருக்கிறாள்.
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவெய்தாதபடி காக்கலாம்.
அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால், அந்த
வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்.
புதுப்பிக்காவிட்டால் அவ் வடிவம் மாறும்.
அழுக்குத் தலையணை, ஓட்டைத் தலையணை,பழைய
தலையணை - அதிலுள்ள பஞ்சையெடுத்துப் புதிய
மெத்தையிேலே போடு. மேலுறையைக் கந்தையென்று
வெளியே எறி, அந்த வடிவம் அழிந்து விட்டது..
வடிவத்தைக் காத்தால்,
சக்தியைக் காக்கலாம்.
அதாவது சக்தியை, அவ்வடிவத்திலே காக்கலாம்.
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை
எங்கும், எதனிலும், எப்போதும், எல்லாவிதத் தொழில்களும்
காட்டுவது சக்தி.
வடிவத்தைக் காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக,
சக்தியைப் போற்றுதல் நன்று. வடிவத்தைக் காக்குமாறு
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை
இழந்துவிடுவர்.
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards