For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
சாகாவரம்
பல்லவி
சாகாவர மருள்வாய், ராமா!
சதுர்மறை நாதா! சரோஜ பாதா!
சரணங்கள்
1.ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்.
ஏகாமிர்த மாகிய நின்தாள்
இணைசர ணென்றால் இது முடி யாதா! (சாகா)
2.வாகார்தோள் வீரா, தீரா
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையின் மென்றோள்
பழகிய மார்பா! பதைமலர் சார்பா! (சாகா)
3.நித்யா, நிர்மலா, ராமா,
நிஷ்களங்கா, சர்வா, தாரா,
சத்யா, சநாதநா, ராமா,
சரணம், சரணம், சரண் முதாரா! (சாகா)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]