பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மார்ச் 23, 2001
சுயசரிதை
(தொடர்ச்சி)
வீழ்ச்சி பெற்றவிப் பாரத நாட்டினில்
ஊற ழிந்து பிணமென வாழுமில்
வூனம் நீக்க விரும்பும் இளையர்தாம்
கூறு மெந்தத் துயர்கள் விளையினும்
கோடி மக்கள் பழிவந்து சூழினும்
நீறு பட்டவிப் பாழ்ச்செயல் மட்டினும்
நெஞ்சத் தாலும் நினைப்ப தொழிகவே. (33)
பால ருந்து மதலையர் தம்மையே
பாத கக்கொடும் பாதகப் பாதகர்
மூலத் தோடு சூலங்கெடல் நாடிய
மூடமூடநிர் மூடப் புலையர்தாம்,
கோல மாக மணத்திடைக் கூட்டுமிக்
கொலையெ னுஞ்செய லொன்றினை யுள்ளவும்
சால வின்னுமோ ராயிரம் ஆண்டிவர்
தாத ராகி அழிகெனத் தோன்றுமே! (34)
ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழ நெஞ்சிடை .யூன்றி வணங்கினன்:
ஈங்கொர் கன்னியைப் பன்னிரண் டாண்டணுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்
தீங்கு மற்றிதி லுண்டென் றறிந்தவன்
செயலெ திர்குந் திறனில னாயினேன்.
ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன்
உளமெ ரித்துள தென்பதுங் கண்டிலேன். (35)
(தொடரும்)












Click it and Unblock the Notifications