For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஆகஸ்டு 25, 2001

Subramaniya Bharathi

வள்ளிப்பாட்டு -1

பல்லவி

எந்த நேரமும் நின்மையல் ஏறுதடீ
குற வள்ளீ: சிறு கள்ளீ!

சரணங்கள்

1. (இந்த) நேரத்தில் லேமலை வாரத்தி லேநதி
யோரத்தி லேயுனைக் கூடி - நின்றன்
வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சி கொண் டாடி - குழல்
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை யோரத்திலே
அன்பு சூடி - நெஞ்சம்
ஆரத் தழுவி அமர நிலை பெற் றதன்
பயனை யின்று காண்பேன். (எந்த நேரமும்)


2. வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
விரித்து பொழிவது கண்டாய் - ஒலிக்
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
குறிப்பினி லேயொன்று பட்டு - நின்றன்
பிள்ளைக் கிழிமென் குதலையிலே மனம்
பின்ன மறச்செல்ல விட்டு - அடி
தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மே! நினைச்
சேர விரும்பினன் கண்டாய்! (எந்த நேரமும்)


3. வட்டங்க ளிட்டுங் குளமக லாத
மணிப்பெருந் தெப்பத்தைப் போலே - நினை
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்துநின்
மேனி தனைவிட லின்றி -
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை இரவியைப்
போன்ற முகத்தாய்! - முத்தம்
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம் இட்டுனைச்
சேர்ந்திட வந்தேன் . (எந்த நேரமும்)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X