கண்ணதாசனை காணுவோம்

Subscribe to Oneindia Tamil

1. ஒரு கோப்பையிலே ..

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! (ஒரு)

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் - நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்! (ஒரு)

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் - நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை! (ஒரு)

2. பரமசிவன் கழுத்திலிருந்து ..

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா செளக்யமா - யாரும்
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் - உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்கூட மிதிக்கும்!

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது! (பரம சிவன்)

வண்டி ஓடச் சக்கரங்கள்
இரண்டு மட்டும் வேண்டும் - அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்
உனைப்போல் அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோறும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது! (பரமசிவன்)

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே - நான் நிலவு
போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் என்னைப் பார்த்து கேலி செய்யும்போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது - இது
கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது. (பரமசிவன்)


3. கண்ணிலே அன்பிருந்தால்

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும் (கண்)

உன்னைப்போல் குழந்தையில்லை
உன்னைப்போல் துணையுமில்லை
உன்னாலே மலர்ந்த உள்ளம்
எண்ணாத நாளுமில்லை (கண்)

அந்த நாள் மறைந்ததம்மா இன்று நான் மனிதனம்மா
செண்டாடும் வடிவழகைக் கண்டாடும் கலைஞனம்மா
அன்னையே உன்வடிவம் தந்தையே உன் இதயம்
அன்பே உன் துணையிருக்க என் பாடல் முடிவதெங்கே? (கண்)


4. மலர்களைப் போல

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான் (கலை)

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மணமகள் வந்து நின்று மாலை சூடக் கண்டான் (கலை)

ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான் (கலை)

பூ மணம் கொணடவள் பால் மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான் (மலர்)


5. யார் யார் யாரோ

ஆ : யார் யார் யார் அவள் யாரோ
பெ: ஊர் பேர்தான் தெரியாதோ
ஆ : சலவைக் கல்லே சிலையாக
தங்கப் பாளம் கையாக
மலர்களிரண்டு வழியாக
பெ: மயங்க வைத்தாரோ (யார்)

ஆ : முத்துமணித் திரள் ரத்தினமோ
மொய்க்குழல் மேகச் சித்திரமோ!
பெ: செக்கச் சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ! (யார்)

ஆ : கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
பெ: நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானாள்! (யார்)

ஆ : அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
பெ: மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+