வைரமுத்துவின் மகன் எழுதிய கவிதை நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
டிசம்பர் 19, 2002
வைரமுத்துவின் மகன் எழுதிய கவிதை நூல் வெளியீடு
சென்னை:
கவிஞர் வைரமுத்துவின் வாரிசான கபிலன் வைரமுத்து எழுதிய என்றான் கவிஞன் என்ற நூல் இன்று வெளியிடப்படுகிறது. இது ஒரு கவிதைத் தொகுப்பாகும்.
வைரமுத்துவின் திருமண மண்டபமான கோடம்பாக்கம் பொன்மணி மாளிகையில் மாலை 6 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமை தாங்குகிறார்.
முதல் பிரதியை டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம் (ப.சிதம்பரத்தின் மருமகள்) பெற்றுக் கொள்கிறார்.
தென்கச்சி சுவாமிநாதன், லேனா தமிழ்வானன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
இந் நிகழ்ச்சியில இளைஞர்கள் சமூக அமைப்பு என்ற புதிய அமைப்பை வைரமுத்து தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications