எழுத்தாளர் பி.டி.சாமி மரணம்
செப்டம்பர் 13, 2004
எழுத்தாளர் பி.டி.சாமி மரணம்
சென்னை:
பேய் கதைகள் எழுதுவதில் புகழ் பெற்றவரான எழுத்தாளர் பி.டி.சாமி (74) இயற்கை எய்தினார்.
திகில், மர்மம் நிறைந்த பேய் கதைகளை எழுதி, "பேய்க் கதை மன்னன் என்று பெயர் பெற்றவர் பி.டி.சாமி. இவரது சொந்த ஊர்நாகர்கோயில் மறவன் குடியிருப்பு. 18 வயதில் எழுதத் தொடங்கிய அவர் 2,000 நாவல்களும், 500க்கும் மேற்பட்டசிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது எழுத்தாற்றலை கெளரவிக்கும் வகையில் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கிசிறப்பித்தது.
"ஓட்டல் சொர்க்கம், "புனித அந்தோணியர் போன்ற படங்களுக்கு பி.டி.சாமி திரைக்கதை எழுதியுள்ளார். தனது சொந்ததயாரிப்பாக இவர் இயக்கிய "பாடும் பச்சைக் கிளி என்ற படம் திரைக்கு வரவில்லை.
அண்மையில் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பி.டி.சாமி, நேற்று அதிகாலைசிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். பின்னர் அவரது
பின்னர் நேற்று மாலை பாலவாக்கம் இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அவருக்கு லட்சுமி என்ற மனைவியும், தங்கம், சித்ரா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications