தமிழ்நாட்டில் தெலுங்கு ஆட்சி மொழி:கொக்கரிக்கும் வெங்கையா
- தென் செய்தி கட்டுரை
""தமிழ்நாட்டிலும், கருநாடகத்திலும், ஒரிசாவிலும் தெலுங்கு ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும். இம் மாநிலங்களில் வாழும்தெலுங்கு மக்கள் இதற்காகப் போராட வேண்டும் எனப் பா.ஜ.க. முன்னாள் தலைவர் வெங்கைய்யா நாயுடு அறைகூவல்விடுத்துள்ளார்.
உலகத் தெலுங்குக் கூட்டமைப்பின் ஆறாவது மாநாட்டில் சிறப்புரையாற்றிய வெங்கைய்யா நாயுடு பேசியதாவது:-
""அகில இந்திய வானொலி, தூர்தர்சன் தொலைக்காட்சி ஆகியவற்றில் தரமான தெலுங்கு நிகழ்ச்சிகளுக்கு நேரம்ஒதுக்கப்படவேண்டும்.
தெலுங்கு-கன்னட மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளாகும். உணர்ச்சிப்பூர்வமாக இரண்டும்பிணைக்கப்பட்டுள்ளன. இரு மொழிகளின் எழுத்துக்களுக்கிடையே வேறுபாடு அதிகமில்லை.
இருமொழிகளும் தோன்றிய வரலாறு ஒரே மாதியானவை, இருமொழிகளுமே இலக்கிய வளமிக்கவை யாகும் என்றார்.
இம் மாநாட்டில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ஆதிகேசவலு,
""கன்னடம் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் உரிய ஒரே மாதிரியான எழுத்து முறையை முன்னாள் தலைமையமைச்சர்பி.வி.நரசிம்மராவ் வடிவமைத்து உள்ளார். இதை நடைமுறைப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை சத்ய சாய்பாபா செய்துவருகிறார். இது குறித்த நூல் ஒன்று விரைவில் வெளியிடப்படும் என்றார்.
வெங்கையா நாயுடுவின் பேச்சுக்குக் கன்னடர் நடுவில் கடும் எதிர்ப்புத் தோன்றியுள்ளது.
கன்னட சாலுவாலிகா இயக்கத் தலைவரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான கன்னடர்கள் கூடி கருநாடகசட்டமன்றம் முன்பாகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
""கருநாடகத்தில் தெலுங்கு மொழியை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று கூறிய வெங்கையா நாயுடு மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஆர்ப்பாட்டக் காரர்கள் முழக்கமிட்டனர்.
ஆனால் தமிழ்நாட்டில் எவ்வித எதிர்ப்புக் குரலும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி- தென்செய்தி([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications