For Daily Alerts
Just In
நார்வேயில் தமிழர் வள ஆலோசனை மைய புதிய கட்டடம்
ஓஸ்லோ: நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நார்வே தமிழர் வள ஆலோசனை மையத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
நார்வேயின் சிறுவர்கள் மற்றும் சம உரிமைகளுக்கான அமைச்சர் மனுவெலா ரமீன் ஒஸ்முண்ட்ஸன் இந்த கட்டடத்தை திறந்து வைத்தார்.
ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந் நிகழ்ச்சியில் ஒஸ்லோ நகரசபை உறுப்பினர் மரியன்ன பொர்கன், ஸ்தொவ்னர் பகுதி காவல்துறை அதிகாரி ஐனார்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் நார்வே நாட்டு அரசியல், சமூகப் பிரதிநிதிகள், ஒஸ்லோ நகரசபை உறுப்பினர்கள், கல்வியாளர்களும் இதில் பங்கேற்றனர்.
Comments
Story first published: Thursday, January 31, 2008, 15:40 [IST]