அமீரக தமிழர் அமைப்பின் முப்பெரும் விழா
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகரான துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் எழாவது ஆண்டு துவக்க விழா உள்பட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு பாராட்டு விழா மற்றும் அமீரகத்தில் சமூக சேவையில் விருது பெற்றவர்களை கௌரவப்படுத்தும் விழா ஆகியவை முப்பெரும் விழாவாகக் துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ராஷித் உள்ளரங்கில் கொண்டாடப்பட்டது.
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் கௌரவத் தலைவர் அஜ்மான் மூர்த்தி தலைமை தாங்கினார். புரவலர் எல். கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில் வீரமணி பேசுகையி்ல், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா எழுதிய ஒரு கட்டுரையால் மனம் நெகிழ்ந்த பெரியார் அவரை பாராட்டுவதற்காக தனது வயதினையும், உடல் முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது கிளம்பிச் சென்றார்.
எனவே எவரையும் பாராட்ட வேண்டும் என எண்ணினால் உடன் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனித நேயத்துடன், உதவி செய்து வாழ பழகப் வேண்டும் என்றார்.
வளைகுடாவின் சிறந்த ஆசிய தொழிலதிபர் விருதுபெற்ற இந்தியரான இடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநர் சையது எம். சலாஹுத்தீன் தனது வாழ்த்துரையில்,
கி. வீரமணி அவர்களின் எளிமையைக் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்திருக்கிறேன். பெரியார் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வாழும் பெரியாராக காட்சி தருகிறார் சத்யராஜ் என்றார்.
நடிகர் சத்யராஜ் தனது உரையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வோர் அங்கேயே தங்கி விடுகின்றனர். ஆனால், வளைகுடாவில் வாழ்ந்து வருவோரே தாயகத்திற்கு பல்வேறு பணிகளைச் செய்து பெருமிதம் கொள்கின்றனர் என்றார்.
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாவது ஆண்டு துவக்க விழா மலரை கி. வீரமணி வெளியிட முதல் பிரதியை சையது எம். சலாஹுத்தீன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் அன்பு மருத்துவமனை குடந்தை அன்பழகன், அஜ்மான் மூர்த்தி, எல். கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியினை திவ்யா தொகுத்து வழங்கினார்.
தகவல்: அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செய்திப்பிரிவு
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications