தற்கொலைக்கு முயன்ற 'ஹாரி பாட்டர்' புகழ் ரௌலிங்
சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த 42 வயதான நாவலாசிரியை ரௌலிங் கூறுகையில், "எனது முதல் கணவர் ஜார்ஸ் ஆரண்டிஸை விட்டு பிரிந்தபோது பெரும் மன உளைச்சலை அடைந்தேன். வாழ்க்கையை வெறுத்து பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன்.
இளம்வயதிலேயே ஆதரவற்ற நிலையில் ஏழ்மை என்னை சின்னாபின்னமாக்கிவிட்டது. ஆனால் நான் மீண்டும் பழைய நிலையை அடையவேண்டும் என்று விரும்பியதற்கு காரணம் என் மகள்.
நான் இருந்த மோசமான சூழ்நிலையில் வாழவேண்டியவள் அல்ல அவள். என் மகள் கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது. அவளை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்தேன்.
எனவே, என் மனக் குழப்பங்களுக்கு மருத்துவ தீர்வை நாடினேன். தற்கொலை தூண்டுதல்களைத் தவிர்ப்பதற்காக மனோதத்துவ சிகிச்சை பெற்றேன். எனது மனநிலை சரியானது.
எனது மனநலம் பற்றி பலவாறாக பேசப்படும் கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்போது பகிரங்கமாக கூறியுள்ளேன்'' என்றார்.
ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் கதை புத்தகங்கள் 40 கோடி பிரதிகள் உலகம் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. புத்தக விற்பனை சாதனையில் 700 கோடி பவுண்டுகளை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. அவரது நாவல்கள் திரைப்படங்களாக வெளியாகி அவையும் பெரும் புகழ் பெற்றன, வசூலையும் வாரிக் குவித்தன.













Click it and Unblock the Notifications