For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடைக்கானலில் மலர் கண்காட்சி!

By Staff
Google Oneindia Tamil News

கொடைக்கானலில் இன்று (சனிக்கிழமை) 47வது மலர் கண்காட்சி துவங்கியது.

இதை வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். வரும் 31ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கும்.

ஆண்டுதோறும் கோடை காலத்தில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவியும் போது அரசின் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.

இதையொட்டி கலை நிகழச்சிகள், விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார போட்டிகள், மீன் பிடிக்கும் போட்டிகள் போன்றவைகள் நடைபெறுகின்றன.

இந் நிலையில் இன்று மலர்க் கண்காட்சி பிரையன்ட் பூங்காவில் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான வகையான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X