ஆசியன் புக்கர் விருது- தெரிவுப் பட்டியலில் சல்மாவின் நாவல்
Subscribe to Oneindia Tamil

தமிழ் எழுத்தாளர் ஒருவர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா (35), தற்போது தமிழக அரசின் சமூக நல வாரியத் தலைவியாக உள்ளார்.
2004-ல் பொன்னம்பட்டி ஊராட்சித் தலைவராக சல்மா இருந்தபோது, பாகிஸ்தானில் ஊராட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள, இந்தியாவில் இருந்து சென்ற 30 பேர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
இந்த தெரிவுப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 10 எழுத்தாளர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஆசியக் கண்டத்தில் இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் எழுத்தாளர்களின் பெயர்கள் இப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. விருதுக்கு தேர்வு செய்யப்படுபவரின் பெயர் வரும் நவம்பர் 13-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications