சுற்றுலா தலமாகும் நெல்லையப்பர் கோயில்

இந்திய சுற்றுலா துறை சார்பில் தமிழகத்தில் சுற்றுலா தல அந்தஸ்த்தில் உள்ள பகுதிகளை பார்வையிட ஆசிய வளர்ச்சி வங்கி குழுவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து டெல்லி ஆசிய வளர்ச்சி வங்கி குழுவின் திட்ட அலுவலர் மைக்கெல் கீரின் தலைமையில் உதவி திட்ட அலுவலர் குர்னித்ராய், முஸ்தபா அகமது ஆகியோர் கடந்த 27ம் தேதி நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா தல அந்தஸ்த்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, குற்றாலம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்மாள் சன்னதி மற்றும் சுற்று பிரகாரங்கள், ஆயிரங்கால் மண்டபம், டவுண் நயினார் குளம், நெல்லையப்பர் கோயில் வெளி தெப்பம், வஉசி மணிமண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஆசிய வளர்ச்சி வங்கி குழு திட்ட அலுவலர் மைக்கெல் கீரின் கூறுகையில், தமிழகத்தில் சுற்றுலா தல அந்தஸ்தில் உள்ள பல்வேறு பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, குற்றாலம், நெல்லையப்பர் கோயில் மண்டபம், வஉசி மணி மண்டபம், ஆகியவை பார்வையிடப்பட்டது.
இதில் நடைபெற உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திட்ட மதிப்பீடு தயாரித்து சுற்றுலா துறை மூலம் டெல்லி ஆசிய வளர்ச்சி வங்கிக்கு அனுப்பவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஒளி, ஒலி காட்சிகள் அமைக்கவும் அம்மையப்பர் விநாயகர் கோயிலில் கல் நடைபாதை அமைக்கவும், வசந்த மண்டபத்தில் நடைபாதை அமைக்கவும் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து சுற்றுலா துறை மூலம் டெல்லிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை பரீசிலித்து திட்டத்திற்கான நிதி ஓதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications