உலகத் தமிழர்களுக்கு.. வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

Vairamuthu
உலக தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதப் போவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில்,

உலகமயமாதல் என்ற அகில உலக சுனாமியிலிருந்து நாம் மீள வேண்டுமானால் இனம், மொழி இரண்டையும் பாதுகாக்கும் பெரும்பணியை நாம் இப்போதே தொடங்க வேண்டும். காலப்போக்கில் வட்டார மொழிகளும், குறுமொழிகளும் அழிந்து போகும் அபாயமிருக்கிறது. தமிழ் அப்படி அழிந்து போகக்கூடாது. தமிழ் அழியவும் அழியாது.

உலகில் இன்று பல ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அடுத்தடுத்து வரும் நூற்றாண்டுகளில் ஆறே ஆறு பெரிய மொழிகள் மட்டும்தான் தப்பிப் பிழைக்கும் என்று ஆய்வு சொல்கிறது. சீனம், ஆங்கிலம், இந்தி, அரபி, ஸ்பானிஷ், தமிழ் ஆகிய 6 மொழிகள் மட்டுமே எதிர்காலத்தில் எஞ்சி நிற்குமாம்.

தமிழர்க்குப் பிறந்த பிள்ளைகள் தமிழ் படித்தே ஆக வேண்டும்.
இங்கே இரண்டு அழகிய கண்மணிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள். ஒவ்வொரு மேடையிலும் வெவ்வேறு பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பொதுப்பாடல் தேவை. தமிழ்நாட்டின் நீராரும் கடலுடுத்த' மலேசிய மண்ணுக்கு பொருந்தாது.

அதனால் தாயகத்தை பிரிந்து வாழும் தமிழர்கள் அனைவரும் எல்லா நாடுகளிலும் பாடுவதற்கு ஏற்றவாறு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதி என் சொந்த பொறுப்பில் இசையமைத்து ஒலிப்பதிவு செய்து வழங்கலாம் என்று கருதுகிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+