For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் உவமைக் கவிஞர் சுரதாவுக்கு சிலை

By Staff
Google Oneindia Tamil News

Suratha
மறைந்த உவமைக் கவிஞர் சுரதாவுக்கு சென்னையில் வைக்கப்பட்டுள்ள சிலையை முதல்வர் கருணாநிதி வரும் 29ம் தேதி திறந்து வைக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முயற்சியால் இந்த 8 அடி உயர சுரதா சிலை உருவாக்கப்பட்டது.

இந்தச் சிலை அசோக்நகர் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி, திருமாவளவன், கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், இளைய கம்பன், ராஜேஸ்வரி கல்லாடன், நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பாரதிதாசனின் தீவிர பற்றாளரான சுரதா உவமைக் கவிதைகள் வடிப்பதில் வரலாறு படைத்தவர். பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவர் ஏராளமான திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார்.

பெரியார் விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது, கலைஞர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர்.

சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவரது குடும்பத்தினருக்கு பெரும் நிதியுதவியை முதல்வர் கருணாநிதி வழங்கியது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X