துபாயில் ஈமான் சங்க 33ம் ஆண்டு தொடக்க விழா
விழாவிற்கு ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினர்.
துணைத்தலைவர்கள் அப்துல் கத்தீம், அஹமது முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினர்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் ஈமான் அமைப்பு செய்து வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை எடுத்துரைத்தார்.
இந்திய துணைத் தூதரகம் அமீரகத்தில் எதிர்பாராதவிதமாக இன்னலுக்குள்ளாகும் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருவதைக் குறிப்பிட்டார்.
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உதவியுடன் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை துவக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
கூட்டத்தில் அமீரகத்தின் 37 ஆவது தேசிய தினத்தையொட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும், இதில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications