கார்த்திகை: திருவண்ணாமலை கோவிலில் இத்தாலிய பக்தர்கள் ஆடிப் பாடி வழிபாடு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் பக்திப்பாடல்கள் பாடி அண்ணாமலையாரை பயபக்தியுடன் வழிபட்டனர்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த சர்ஜோ பீட்டர் என்பவர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது திருவண்ணாமலை வந்து தமிழில் பக்திப்பாடல்களை பாடி அண்ணாமலையாரை வழிபடுவதை கடந்த 4 ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டும் வழக்கம் போல் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையார் பக்தி பாடல்களை அவர்கள் பாடியும், ஆடி வழிபட்டனர்.
இது குறித்து சர்ஜோ பீட்டர் கூறுகையில், இத்தாலியில் சிவலோக ஆசிரமத்தை நடத்தி வருகிறேன். இதில் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆண்டுதோறும் தீபத் திருவிழா மற்றும் சிவராத்திரிக்கு திருவண்ணாமலைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
1982 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலைக்கு வந்துகொண்டிருக்கிறேன். சிவராத்திரி முடிந்து ஒரு மாதம் இரவில் தொடர்ந்து கிரிவலம் சென்று வருகிறேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications