2008ன் முக்கிய சம்பவங்கள்!

கே.பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் படம் பார்த்தவர்கள், தண்ணீருக்கு இப்படியெல்லாமா கஷ்டப்படுவார்கள் என அதிசயித்துப் போய் அதிர்ச்சியும் அடைந்தனர்.
ஆனால் போர்க்காலத்தில் ஏற்படுவதைப் போன்ற ஒரு பேரவல நிலை ஆகஸ்ட் 25ம் தேதியன்று தமிழகத்தில் ஏற்பட்டது.
ஆனால் இது தண்ணீருக்கல்ல. வாகனங்களின் ஆதாரமான பெட்ரோல், டீசலுக்குத்தான் இந்தப் பஞ்சம்.
தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் இல்லாமல் பங்குகள் மூடப்பட்டன. இந்த திடீர் பஞ்சத்தால் மக்கள் பேரவதிக்குள்ளானார்கள்.
விடிய விடிய பெட்ரோல், டீசலைத் தேடி வாகனங்களை தள்ளிக் கொண்டும், திறந்திருந்த ஓரிரு பெட்ரோல் பங்குகள் முன்பு நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தும், கேன்களோடு அலைந்து திரிந்தும் மக்கள் பட்ட அவதி சாமானியத்திற்கு மறக்க முடியாதது.
2 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த பெட்ரோல், டீசல் பஞ்சத்தால், தமிழக மக்கள் சொல்லொணா துயரத்தை சந்தித்து விட்டனர்.
2008ம் ஆண்டில் தமிழக மக்களால் மறக்க முடியாத துயரங்களில் இதுவும் ஒன்று.












Click it and Unblock the Notifications