'இஸ்லாமும் இந்தியாவும்' நூல் வெளியீட்டு விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள ரோசரி மன்றத்தில் இஸ்லாமும் இந்தியாவும்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
ராமநாதபுரம், ரோசரி மன்றத்தில் பயோனியர் மருத்துவமனையும், மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகமும் இணைந்து நடத்திய விழாவில் இஸ்லாமும் இந்தியாவும் என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த
விழாவிற்கு, ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மை.அப்துல்சலாம் தலைமை வகித்தார்.
செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் செயலர் டாக்டர். சின்னத்துரை அப்துல்லா, மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகத் தலைவர் அப்துல்வஹாப், எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி காதிர் முகைதீன், திருப்பாலைக்குடி ஐக்கிய ஜமாத் தலைவர் உமர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐக்கிய சமூக நலக் கூட்டமைப்பின் செயலர் ஹாஜா முகைதீன் ஆலிம் வரவேற்றார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த டி.ஞானையா எழுதிய இஸ்லாமும் இந்தியாவும் என்ற நூலின், முதல் பிரதியை பயோனியர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஏ.அஹமது அஷ்ரப் வெளியிட, அதை ஏ.ஆர்.மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர்.பாத்திமா சின்னத்துரை பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை, தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் எம்.எஸ்.கருணாநிதி பெற்றுக் கொண்டார்.
விழாவில் நிறைவாக செய்யது ஜாபர் அலி நன்றி கூறினார்.