வேதாரண்யத்தில் மயங்கி கிடந்த ராட்சத கழுகு!

நாகை மாவட்டம் கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்திற்கு உள்நாட்டு பறவைகள் முதல் வெளி நாட்டு பறவைகள் வரை குறிப்பிட்ட பருவ காலங்களில் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 6 கிலோ எடையுள்ள ராட்சத கழுகு கோடியக்கரை அருகே மயக்க நிலையில் கிடந்துள்ளது.
இதைக் கண்டு மிரண்டு போன மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த ராட்சத கழுகை மீட்டனர். அதை அருகில் உள்ள கால்நடைத்துறை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.
சிகிச்சை முடிந்த பின்பு அந்த ராட்சத கழுகை சரணாலயத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த வகை கழுகுகள் ஆப்பிரிக்காவில் தான் அதிகம் காணப்படும் என்று கூறப்படுகிறது. இறை கிடைக்காத நிலையில் இந்த கழுகு மயங்கி விழுந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.












Click it and Unblock the Notifications