மாதா அமிர்தானந்தமயி 22ம் தேதி சென்னை வருகை
பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்படும் சத்குரு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சென்னை விருகம்பாக்கத்தில் பிரமஸ்தான ஆலயம் அமைத்துள்ளார்.
இதன் 19ம் ஆண்டு விழா வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விழாவினை சிறப்பிக்க ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சென்னை விருகம்பாக்கத்திற்கு வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மாவின் அருள் பெருமாறு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி மடத்தின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாளை மறுநாள் காலை 6 மணிக்கு தியானம் மற்றும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை துவங்குகிறது. இது மாலை 6 மணி வரை நடைபெறும்.
பிற்பகல் 11 மணி முதல் மாலை 7 மணி வரை அம்மாவின் சத்சங்கம், பஜனை மற்றும் தரிசனம் நடக்கிறது. 22ந் தேதி காலை 7.30 மணிக்கு ராகு தோஷ நிவாரண பூஜையும், மாலை 6.30 மணிக்கு சனி தோஷ நிவாரண பூஜையும் நடைபெறுகிறது.
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சென்னை வருகை குறித்து மேலும் விவரங்களுக்கு: 2376 4063, 2376 4096 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம்.