திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு நடிப்பு, வசனம் எழுதுவதற்கு பயிற்சி வகுப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் நாடகத்தில் நடிக்க, வசனம் எழுதுவதற்கான நாடகவியல் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.
திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி, ரசிக ரஞ்சன சபா, மண்டல கலை மற்றும் பண்பாட்டுத்துறை, மற்றும் ஸ்பார்க் அமைப்பு ஆகியோர் இணைந்து இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்காக இந்த பயிலரங்கத்தை நடத்துகின்றன.
ஜனவரி 30ம்தேதி முதல் பிப்ரவரி 1 ம்தேதி 2009 வரை மூன்று நாட்கள் கல்லூரி வளாகம் அருகில் உள்ள தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, வளாகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் நாடகவியல் துறைத்தலைவர் முனைவர் இராமசாமி பொறுப்பேற்று நடத்தித் தர உள்ளனர்.












Click it and Unblock the Notifications