For Daily Alerts
Just In
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்லூரியில் பிப். 3ல் மினி மாரத்தான்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரி நிறுவனங்களின் சார்பில் மாவட்ட அளவிலான மினி மராத்தான் போட்டி வரும் பிப்ரவரி 3 ம் தேதி நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியின் நிறுவனர் டாக்டர் வி.பி.எம்.எம். சங்கரின் தந்தையின் 4 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி வரும் 3 ம் தேதி நடைபெறுகிறது.
இதில் பங்கு பெற விரும்பும் கல்வி நிறுவனங்கள் உதவி உடற்கல்வி இயக்குனர் எம். பாலையாவை தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு வெற்றிக் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
Comments
Story first published: Saturday, January 24, 2009, 12:05 [IST]