For Daily Alerts
Just In
கின்னஸ் சாதனை முயற்சி - கல்லூரி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் ரத்ததானம்
தஞ்சையில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.
இந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இன்று காலை 9 மணியிலிருந்து 1 மணி வரை 20 ஆயிரம் பேர் கின்னஸ் சாதனைக்காக ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேண்டுகோளின்படி, நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள், செஞ்சிலுவை சங்க அலுவலர்கள், கல்லூரி அலுவலர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
இதற்கு முன் சண்டிகாரில் 14 ஆயிரத்து 500 பேர் ரத்த தானம் செய்ததே மிக அதிக அளவாக கருதப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
Story first published: Saturday, February 21, 2009, 10:58 [IST]