உலக தமிழ்க் கழக பொதுச் செயலாளர் குடந்தைக் கதிர். தமிழ்வாணன் மரணம்

காலை 6.35 மணியளவில் அவர் இயற்கை எய்தினார்.
கதிர்.தமிழ்வாணனார், இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்புற்று அண்மையில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தார்.
சிறிது முன்னேற்றம் கண்ட அளவில் குடந்தையில் உள்ள அவரது இல்லத்தில்(54 பாவாணர் இல்லம், சான் செல்வராசு நகர், குடந்தை(புதிய பேருந்து நிலையம் கீழ்ப்புறம்) ஓய்வெடுத்து வந்தார்.
தமிழ்வாணன், தனது கண்களைத் தானமாக வழங்க முன்பே உறுதிமொழி செய்திருந்தார். அதன் பிறகு உடற்கொடை செய்யவும் ஆவணம் தயாரித்து வைத்திருந்தார்.
அதன்படி இன்று பகல் ஒரு மணியளவில் இல்லத்திலிருந்து உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பெற்று கண் கொடை வழங்கி, இங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் விவரம் அறிய பேராசிரியர் அ.குணசேகரனைத் (9487031795) தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications