துபாய்.. சிறப்பாய் நடந்த மீலாத் சொற்பொழிவு
துபாய்: மதுக்கூர் சுன்னத் வல் ஜமாத் சார்ப்பில் துபாயில் கடந்த 10ம் தேதி அன்று புனித மீலாத் நபி விழா சொற்பொழிவு நடந்தது.
துபாய் தேரா கோட்டைப் பள்ளிவாசலில் நடந்த இந்த விழாவிற்கு மதுக்கூர் சுன்னத் வல் ஜமாத் தலைவர் ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார். செயற்க்குழு உறுப்பினர். அப்துல் காதர் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைக்க, கெளரவ தலைவர். இமாமுதீன் வரவேற்புரையாற்றினார்.
செயற்க்குழு உறுப்பினர் முஹம்மது ரூமி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடைப்பெற்ற நிகழ்வுகளை பற்றி சிறு உரை நிகழ்த்தினார். அதன் தொடர்ச்சியாக முஹம்மது மரூப் காகா உரை நிகழ்த்தினார்.
சிறப்பு பேச்சாளர் மெளலவி. அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்ஸலுல் உலமா செய்யிது பேரூரை நிகழ்த்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வினில் நடந்த நிகழ்வுகளையும், அதன்படி எப்படி வாழ்வது என்பதையும் மிக தெளிவாக சொற்பொழிவு நிகழ்த்தினார்.
விழாவின் சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டது. இதில் மதுக்கூர் சுன்னத் வல் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அனைத்தூர் ஜமாத்தார்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி பற்றி சிறப்பாக விளம்பரம் செய்த முதுவை ஹிதாயத்துல்லாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தட்ஸ்தமிழுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
விழா முடிவில் செயற் குழு உறுப்பினர் முஹம்மது ரூமி நன்றியுரை நிகழ்த்த தொடர்ந்து ஸலாவத் பைத்து ஓதி தூஆச் செய்யப்பட்டு விழா சிறப்புடன் நிறைவடைந்தது.
விழாவிற்க்கான ஏற்பாடுகளை மதுக்கூர் சுன்னத் வல் ஜமாத் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications