Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செங்கோட்டில் தமிழ் இணையப் பயிலரங்கு

Subscribe to Oneindia Tamil

திருச்செங்கோடு: உலகில் வளர்ந்து வரும் துறையாக இருப்பது இணையம் என்ற தொழில்நுட்பத் துறையாகும்,தமிழ் வழியாக இணையத்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சி அண்மைக் காலமாகத் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழ் இணையப் பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பெற வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் வலைப்பூக்கள் வழியாகத் தமிழ்சார்ந்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும்.தமிழ்ப் பக்கங்களின் எண்ணிக்கை மிகுதியாகும்.

அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி அமெரிக்காவில் உள்ள தமிழ் மணம் இணையத்திரட்டியுடன் இணைந்து ஒரு நாள் பயிலரங்கை நடத்துகிறது.பல நூறு மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

இடம்: கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு,
நாள்: 14.03.2009,சனிக்கிழமை.
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

புலவர் இராசு, கவிதா சீனிவாசன்,முனைவர் நா.கண்ணன், முனைவர் மு.இளங்கோவன், முனைவர் குணசீலன், இரா.சந்திரசேகரன், கார்த்திகேயன், ப.சரவணன், த.கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இப் பயிலரங்கில் தமிழ்த் தட்டச்சு,மின்னஞ்சல்,தமிழ் இணைய இதழ்கள், விக்கிபீடியா, இணையப்பாதுகாப்பு, வலைப்பூ உருவாக்கம் பற்றி காட்சி விளக்கத்துடன் பயிற்சியளிக்க உள்ளனர்.

முன்பதிவு செய்து கலந்துகொள்ள வேண்டும்

தொடர்புக்கு:

பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள்
தமிழ்ப்பேராசிரியர்
கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு- 637 215
செல்பேசி + 94435 51701
மின்னஞ்சல் [email protected]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+