For Daily Alerts
Just In
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்திற்கு தங்கத் தகடு
இதற்கான பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து ரூ. 12 கோடி செலவில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இவை முடிவடையும் தருவாயில் உள்ளன.
அதில் முக்கியப் பணியாக, அம்மன் கோபுரத்தில் தங்ககத் தகடு பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. 29.5 கிலோ தங்கம் இதற்காக கோவில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 4 கோடியாகும்.
தங்கத் தடுகளைப் பொருத்துவதற்காக ரூ. 4 லட்சம் செலவில் 1000 கிலோ தாமிரத் தகடுகள் வாங்கப்பட்டுள்ளன. தாமிரத் தகடுகள் மீது தற்போது தங்கத் தகடுகளைப் பொருத்தி வருகின்றனர். பின்னர் அவை கோபுரத்தில் பதிக்கப்படும்.
ஏப்ரல் 2ம் தேதி முதல் யாக சாலைப் பூஜைகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான காப்புக் கட்டுதல் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது.
Comments
Story first published: Wednesday, March 18, 2009, 13:44 [IST]