சொந்தமாக வீடு, நிலம் இல்லாத லாலு!!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தனக்கு சொந்தமாக வீடு, நிலம் எதுவும் இல்லை என்றும், தனது குடும்பத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ 1.2 கோடி சொத்து மட்டுமே இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.

பீகார் முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் கடந்த 1997ல் மாட்டூ்த் தீவண ஊழலில் சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதில் இவரும் இவரது மனைவி ராப்ரி தேவியும் பல கோடி ரூபாய் சுருட்டியதாக குற்றம்சாட்டப்ட்டது.

தற்போது மத்திய ரயில்வே அமைச்சர் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள சரண் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அவர் அதனுடன் தனது சொத்து பட்டியலையும் இணைத்துள்ளார்.

அதில் அவர்,

எனக்கு சொந்தமாக வீடு, நிலம் எதுவும் இல்லை. வங்கிகளில் மட்டும் ரூ. 12.11 லட்சம் கையிருப்பு உள்ளது. எனது பெயரில் ரூ. 95 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் இருக்கின்றன.

இது தவிர ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள மாருதி கார் ஒன்றும், ஏலத்தில் எடுக்கப்பட்ட ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள ஜீப் ஒன்று இருக்கிறது.

வங்கிகளில் எனது மனைவி ராப்ரி தேவியின் பெயரில் ரூ. 24 லட்சமும், தங்களது குழந்தைகளின் பெயரில் ரூ. 39.58 லட்சமும் உள்ளது. ராப்ரிக்கு ரூ 63 லட்சம் மதிப்புள்ள நிலமும், தனது குழந்தைகளுக்கு ரூ. 57.7 லட்சம் மதிப்புள்ள நிலமும் இருக்கிறது.

எங்களது குடும்பத்துக்கு சொந்தமாக 60 மாடுகளும், 36 கன்றுகளும் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் என லாலு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+