தாமிரபரணியை சுத்தப்படுத்த கைகோர்க்கும் இஸ்ரோ-அண்ணா பல்கலை

இந்தப் பணிக்காக தாமிரபரணி நதியை செயற்கைக் கோள்கள் மூலம் இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு மையம் (Isro's Hyderabad-based National Remote Sensing Agency) ஆராயும்.
இது குறித்து இந்த மையத்தின் இயக்குனர் ஜெயராமன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியாதவது:
தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. ஆனால், விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்னும் 50 ஆண்டுகளில் சாப்பிட உணவு இருக்குமா என்ற அளவுக்கு விவசாயம் கேள்விகுறியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் புதிய தொழில்நுட்ப உதவியுடன் நீர்க்குட்டைகள் அமைத்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நல்ல பலனை கொடுத்துள்ளது. இந்த திட்டத்தை பல்வேறு நாடுகள் பின்பற்ற உள்ளன. நீர்குட்டைகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புவி வெப்பமாதல் தற்போது உள்ள மிகப்பெரிய சவாலாகும். ஆண்டுக்கு ஆண்டு 2 டிகிரி வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் கடல் நீர் மட்டம் 3 மி.மீ. அதிகரித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கடல் நீர்மட்டம் அதிகரித்தால் உலகிற்கு மிக பெரிய ஆபத்து ஏற்படும். இந்த ஆபத்தில் இருந்து பாதுகாக்க புவி வெப்பமாதலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இளைஞர்கள் முன் வர வேண்டும்.
காற்றாலை, கடல் அலை மின் உற்பத்தி, சூரிய ஒளி ஆகியவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்ய வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் புண்ணிய நதியான தாமிரபரணி மாசுபடுவதை தடுக்கும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் முன் வந்துள்ளது.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நாங்களும் உதவுவோம்.
தொடர்ந்து தாமிரபரணி மாசுபடுவதை தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் அண்ணா பல்கலைக்கழகமும் நாங்களும் இறங்கவுள்ளோம் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications