தாமிரபரணியை சுத்தப்படுத்த கைகோர்க்கும் இஸ்ரோ-அண்ணா பல்கலை

இந்தப் பணிக்காக தாமிரபரணி நதியை செயற்கைக் கோள்கள் மூலம் இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு மையம் (Isro's Hyderabad-based National Remote Sensing Agency) ஆராயும்.
இது குறித்து இந்த மையத்தின் இயக்குனர் ஜெயராமன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியாதவது:
தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. ஆனால், விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்னும் 50 ஆண்டுகளில் சாப்பிட உணவு இருக்குமா என்ற அளவுக்கு விவசாயம் கேள்விகுறியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் புதிய தொழில்நுட்ப உதவியுடன் நீர்க்குட்டைகள் அமைத்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நல்ல பலனை கொடுத்துள்ளது. இந்த திட்டத்தை பல்வேறு நாடுகள் பின்பற்ற உள்ளன. நீர்குட்டைகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புவி வெப்பமாதல் தற்போது உள்ள மிகப்பெரிய சவாலாகும். ஆண்டுக்கு ஆண்டு 2 டிகிரி வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் கடல் நீர் மட்டம் 3 மி.மீ. அதிகரித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கடல் நீர்மட்டம் அதிகரித்தால் உலகிற்கு மிக பெரிய ஆபத்து ஏற்படும். இந்த ஆபத்தில் இருந்து பாதுகாக்க புவி வெப்பமாதலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இளைஞர்கள் முன் வர வேண்டும்.
காற்றாலை, கடல் அலை மின் உற்பத்தி, சூரிய ஒளி ஆகியவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்ய வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் புண்ணிய நதியான தாமிரபரணி மாசுபடுவதை தடுக்கும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் முன் வந்துள்ளது.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நாங்களும் உதவுவோம்.
தொடர்ந்து தாமிரபரணி மாசுபடுவதை தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் அண்ணா பல்கலைக்கழகமும் நாங்களும் இறங்கவுள்ளோம் என்றார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications