தமிழ் ஈழ அரசாங்கத்தின் தலைவர் ருத்ரகுமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் சட்ட ஆலோசகராகவும், புலிகள் இயக்கத்தின் அரசியலமைப்புக் கமிட்டியின் உறுப்பினருமான டாக்டர் விஸ்வநாதன் ருத்திரகுமார்தான் தற்போது கே.பியால் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் ஈழ அரசாங்கத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பவர்.

அமெரிக்காவில் வசித்து வருகிறார் ருத்ரகுமார். விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக செயல்படுகிறார்.

பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவர்தான் ருத்ரகுமார்.

முன்பு இலங்கையின் வட கிழக்கில் தமிழ் ஈழ அரசாங்கத்தை அறிவிப்பது குறித்து, பாரீஸில் நடந்த இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து நாட்டு அரசியலமைப்பு மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் புலிகள் அமைப்பின் சார்பில் மறைந்த பாலசிங்கத்துடன் இணைந்து ருத்ரகுமாரும் பங்கேற்றார்.

பிரபாகரன் அமைத்த விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியலமைப்பு கமிட்டியில் ருத்ரகுமாரன் தவிர சிங்கப்பூரைச் சேர்ந்த சொர்ணராஜா, மலேசியாவைச் சேர்ந்த ராமசாமி, முன்னாள் இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரல் சிவ பசுபதி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். சிவ பசுபதி தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேபி அறிவித்துள்ள புதிய தமிழ் ஈழ அரசாங்கம் என்ற அறிவிப்பு விடுதலைப் புலிகள் தரப்பின் புதிய நடவடிக்கைக்கான முதல் படி என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+