ஈழத்திற்கு இப்போது தேவை இன விடுதலை - சத்யராஜ்

Subscribe to Oneindia Tamil

Sathyaraj
சென்னை: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த செயல் மிகவும் வேதனையைத் தருவதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக குமுதம் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி..

இத்தனை நாளும் ஈழத்திற்காக குரல் கொடுத்த திரையுலகம் இன்று போர் முடிந்து, தமிழர்கள் இரும்புக் கொட்டடிக்குள் உணவின்றி, மருந்தின்றி, உடையின்றித் துன்பப்படும்போது மௌனமாக இருக்கிறதே...

நீங்கள் சொல்வதுபோல் இப்போதுதான் அதிகமாக குரல் கொடுக்க வேண்டும். அதற்கான நேரம் இதுதான். நிச்சயம் குரல் கொடுப்போம். மாவீரன் சீமான் போன்றவர்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனிமேலயாவது தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து, கொடுத்து நடத்தினாதான் சிங்களர்களுக்கு நல்லது. இனி மறுபடியும் ஒரு போராட்டம் வந்தால், புரட்சி வெடித்தால் இதை விட வேகமாக வரும்.

ஐ.நா.வின் போர் குற்ற விசாரணைக்கு இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டிருக்கிறதே...

ரொம்பவும் வேதனையான விஷயம் இது. இதைச் செய்ய எப்படி மனசு வந்ததுன்னு தெரியல. இதைப் பற்றி வெளிப்படையா இங்கிருப்பவங்க பேச முடியாத சூழ்நிலை.

ஈழத் தமிழர்களுக்கு கண்ணுக்குத் தெரியுற முள் வேலின்னா, நமக்கு கண்ணுக்குத் தெரியாத சட்டம் என்கிற வேலி தடுக்குது.

எந்த ஒரு விஷயமும் விடுதலையை நோக்கித்தான் போகும். மனதிலிருந்து விடுதலை தேடுறதுதான் ஆன்மிகம். அதாவது மன விடுதலை. அதேபோல ஈழத்தில் தேவை இன விடுதலை. அதற்காக எந்த ரூபத்திலாவது போராட்டம் வெடித்துக் கொண்டுதான் இருக்கும் என்று கூறியுள்ளார் சத்யராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+