திருச்செந்தூர் முருகனுக்கு தங்கப் பாதம்!

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் மூலருக்கு இன்று தங்கப்பாதம் பொருத்தப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோயிலில் வரும் ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் மூலவர் வீரபாகுமூர்த்தி, வீரமகேந்திரன், 108 மகாதேவர், சண்டிக்கேஸ்வரர், சத்ருசம்ஹார மூர்த்தி ஆகிய சிலைகள் சேதமசடைந்துள்ளதாக ம்துரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மூலவரின் வலது கால் பெருவிரல் நகப்பகுதியில் ஏற்பட்ட சேதம் காரணமாக மூலவருக்கு தங்க பாதம் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் கூறுகையில்,

சேலம் பக்தர்கள் உபயமாக வழங்கிய ஒரு கிலோ தங்கம் மூலம் மூலவரின் கால் பின்னத்திற்கு தங்க பாதம் நிரந்தரமாக பொருத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தங்க பாதம் கேரள தந்திரிகளால் இன்று காலை 10 மணி முதல் 11 மணிக்குள் பொருத்தப்பட்டது.

இதனால் இன்று காலை காலை 10 மணிக்கு நடக்கவிருந்த உச்சிகால அபிஷேகம் நடைபெறவில்லை. பரிகார பூஜை நடந்ததால் மூலவரின் நடை சாத்தப்பட்டது. காலை 10 மணி முதல் 11 மணி வரைக்கும் பக்தர்கள் யாரும் மகா மண்டபத்திற்கு அனுமதிக்கப்படவில்லை என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+