நெல்லை நெல்லையப்பர் கோயிலில் இன்று ஆனித் தேரோட்டம்
நெல்லை: நெல்லையில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் இன்று ஆனித் தேரோட்டம் நடைபெற்றது.
நெல்லையப்பர்-காந்திமதி கோயிலில் ஆனிப் பெருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து தினமும் கோயிலில் விசேஷ பூஜைகள், தீபாரதனை, சிறப்பு நிகழ்ச்சிகள், சுவாதி வீதி உலா, பன்னிரு திருமுறை பரயாணம் நடந்து வருகிறது.
நேற்று காலை சுவாமி நடராஜ பெருமாள் வெள்ளை சாத்தி எழுந்தருளல், உட்பிரகாரம் உலா வருதல், பச்சை சாத்தி எழுந்தருளல் வீதி உலாவும், மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலாவும் நடந்தது.
மாலையில் கோயில் சென்னை சுசீத்ரா குழுவினரின் பக்தி இன்னிசையை தொடர்ந்து இரவில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து இரவில் தேர் கடாட்சம் வீதி உலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலாவும் நடந்தது.
திருவிழாவின் 9ம் நாளான இன்று அதிகாலை 3.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளல், காலை 8.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. தொடர்ந்து 4 ரத வீதிகள் வழியாக திருத்தேர் சென்று தேர் நிலையத்திற்கு வந்தடைகிறது.
தேரோட்டத்திற்காக இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தேரோட்ட விழாவை அமைதியாவும், சிறப்பாகவும் நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.