அஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் அட்லாண்டாவில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார்.
அங்கு அவர் பேசுகையில்,
ஈழத்து கலை நிகழ்ச்சி இங்கே நடந்த போது, என் கண்களின் ஓரம் ஈரமானது. அங்கு போர் நின்று விட்டதாக சொல்லப்படுகிறது. களம் ஓய்ந்து விட்டாலும், காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.
அப்பாவி தமிழர்கள், சம உரிமையோடு, அவரவர் நிலத்தில் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களின் துயரத்தில் பங்கேற்கும் விதத்தில், நான் எனது பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை.
அஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல. கிழக்கு சிவக்கும். மறுபடி உதிக்கும். அது போல் ஈழம் பிறக்கும் என்றார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications