மூடப்பட்ட திருப்பதி கோவில்
திருப்பதி: சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நேற்றிரவு முதல் 15 மணி நேரம் மூடப்பட்டது.
இன்று காலை 5.28 மணி முதல் 7.18 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்ட நிலையில் நேற்றிரவு 8 மணி முதல் இன்று காலை 11 மணி வரை 15 மணி நேரம் திருப்பதி கோவில் மூடப்பட்டது.
இதனால் கோவிலில் வழக்கமாக நடைபெறும் சகஸ்ர அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது.
இன்று காலை 8 மணி முதல் கோவில் சுத்தப்பட்டுத்தப்பட்டு 11 மணிக்கே கோவில் திறக்கப்பட்டது.
சூரிய கிரகணத்தின்போது குமரி மாவட்டத்தில் உள்ள பகவதியம்மன் கோவில், உள்ளிட்ட சுமார் 500 கோயில்களில் நடை அடைக்கப்பட்டிருந்தது. சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோயில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதே போல மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் இன்று காலை 8 மணிக்கு மேல் தான் திறக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னரே பக்தர்கள் தரிசனம் தொடங்கியது.
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் கிரகணத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
அதே போல தமிழகம் உள்பட நாடு முழுவதும் அனைத்துக் கோவில்களும் கிரகணத்தையொட்டி மூடப்பட்டு, பரிகார பூஜைகளுக்குப் பின்னரே திறக்கப்பட்டன.