டெல்லி டூ பால்வால் மகளிர் சிறப்பு ரயில் - தொடங்கி வைத்தார் மமதா
டெல்லி: நாட்டின் முதலாவது மகளிர் ரயில் என்ற பெருமை உடைய, டெல்லி - பால்வால் இடையிலான மகளிர் சிறப்பு ரயிலை ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
விரைவில் மும்பை- டெல்லி இடையே இளைஞர் சிறப்பு ரயில் விடப்படும் என்றும் அப்போது அவர் அறிவித்தார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் சிறப்பு ரயிலைத் தொடங்கி வைத்து மமதா பேசுகையில், இதேபோல அலிகார், காசியாபாத், சோனிபட் ஆகிய புறநகர்ப் பகுதிகளுக்கும் சிறப்பு மகளிர் ரயில்கள் விடப்படும்.
டெல்லியிலிருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு நான் ஸ்டாப் ரயில்கள் (டூரன்டோ) விடப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தேன். அதன்படி அந்த ரயில்கள் விடப்படும்.
மொத்தம் 12 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக டெல்லி- சியால்டா, ஹஸரத் நிஜாமுதீன்- புனே, மும்பை- ஹவுரா ரயில்கள் இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும்.
அதேபோல, துக்ளகபாத்- சென்னை, துக்ளகபாத்- ஹவுரா, துக்ளகாபாத் மும்பை இடையிலான விரைவு பார்சல் சேவையும் விரைவில் தொடங்கும்.
ரூ. 399 டிக்கெட் கட்டணத்தைக் கொண்ட முதலாவது இளைஞர் ரயில் மும்பை- டெல்லி இடையே விரைவில் தொடங்கப்படும் என்றார் மமதா.












Click it and Unblock the Notifications