இணையதள எழுத்துக்கு தனி அடையாளம் தேவை - எஸ். ராமகிருஷ்ணன்
மதுரை: இணையதள எழுத்துக்கு தனித்த அடையாளம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் உயிரோசை ஓராண்டு நிறைவு நடைபெற்றது.
இந்த விழாவில் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது...
இணையத்தில் எழுதும் பழக்கத்தை மறைந்த சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் மேற் கொண்டபோது தேடிச் சென்று அதை அறிந்தவன் நான்.
எழுத்தாளர்களுக்கு இலக்கியம், கவிதை, கதை என பரந்த வாசிப்புத்தளம் இணையத்தில் உருவாக்கப்பட வேண்டும்.
ஆரம்ப காலக்கட்டத்தில் திண்ணை முதலான இணையதளங்கள் தமிழில் இருந்தன. தற்போது கீற்று உள்ளிட்ட சிறு பத்திரிகைகள் கூட இணையதளத்திற்கு வந்து விட்டன.
தற்போது, இணையதளத்தில் வலைப்பக்கம் ஆரம்பித்து எழுதுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பத்திரிகைகளுக்கு கட்டுரை, கதை அனுப்பி அது பிரசுரமாகாமல் திருப்பி அனுப்பப்படும்போது அதை வலைப்பக்கத்தில் வெளியிடும் போக்கும் உள்ளது.
இணையத்தை தவறாகப் பயன்படுத்த அதிக சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஒருவரே வெவ்வேறு பெயர்களில் 5 வலைப்பக்கத்தை ஆரம்பித்து தாங்களாகவே அதற்குரிய கருத்துகளையும் எழுதும் நிலையும் உள்ளது. இதனால், இணையதள எழுத்துக்கு என்று தனித்த அடையாளம் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும், இணையதளங்களில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப் படங்கள் இல்லை. பலருக்கும் புகைப்படங்கள்கூட இல்லை. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications