ஜோக் அருவியில் சிக்கிய 8 சுற்றுலா பயணிகள் மீட்பு
ஷிமோகா: இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி என்ற பெயருடைய கர்நாடக மாநிலத்தின் ஜோக் அருவியில் சிக்கி கொண்ட 8 சுற்றுலா பயணிகளை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
கர்நாடக மாநிலம் ஷிராவதி நதி பகுதிகளில் கடந்த பல நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள லிங்கன்மக்கி அணை நிறைந்து வழிகிறது.
அணையிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் அதிகரித்ததை அடுத்து ஜோக் அருவிப் பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
ஷாராவதி ஆறு ஜோக் நீர்வீழ்ச்சிப் பகுதியில் வரும்போது நான்கு கிளைகளாகப் பிரிந்து கிட்டத்தட்ட 800 அடி உயரத்திலிருந்து அருவியாக கொட்டுகிறது. இந்தப் பகுதிக்கு முங்காரு மலே என்று பெயர். இந்த இடத்திற்கு பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
ஷாராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அறியாத 8 சுற்றுலா பயணிகள் முங்காரு மலே பகுதியில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் போலீஸார் மீட்பு குழுவினருடன் சென்று அவர்களை காப்பாற்றினர்.
அந்த பயணிகள் 8 பேரும் தாவணகரே மாவட்டம் ஹரிஹார் பகுதியை சேர்ந்தவர்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இது போல் அருவியின் மேல் பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகள் மாட்டி கொள்வது இது முதல் முறை அல்ல. எட்டாவது முறை. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications