முனைவர் மு.இளங்கோவனின் 2 நூல்கள் வெளியீடு
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரியில் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது.
புதுச்சேரி தமிழ்ச் சங்க கட்டடத்தில் 30ம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை விழா நடைபெறுகிறது.
பேராசிரியர் இரா. அகிலா தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் அ.அறிவுநம்பி தலைமை தாங்குகிறார்.
புலவர் இ. திருநாவலன் முன்னிலை வகிக்க, முனைவர் இரா.வாசுகி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் ஆகிய இரு நூல்களையும், புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் இரா. இராதாகிருட்டிணன் வெளியிடுகிறார்.
முனைவர் மு. தங்கராசு, துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம், நூல்களைத் திறனாய்வு செய்கிறார்.
அயலகத் தமிழறிஞர்கள் முதலிருபடியை தி.ப. சாந்தசீலனார், குவைத்தைச் சேர்ந்த பொறியாளர் தமிழ்நாடன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
இணையம் கற்போம் நூலின் முதலிருபடியை, முனைவர் கல்பனா சேக்கிழார், முனைவர் இரா. பொன்னுத்தாய் பெற்றுக் கொள்கின்றனர்.
முனைவர் து. சாந்தி (முதல்வர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி), முனைவர் அ. அழகிரிசாமி (முதல்வர், இராசேசுவரி மகளிர் கல்லூரி), இரா. அனந்தராமன் (ச.ம. உறுப்பினர்), முனைவர் அரங்க. பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), குணவதி மைந்தன் (குறும்பட இயக்குநர்)
பாவலர் மகரந்தன் (சாகித்திய அகாடமி உறுப்பினர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
பாவலர் சீனு. தமிழ்மணி நன்றியுரை நவில்கிறார்.
அயலகத் தமிழறிஞர்கள் (ரூ.200), இணையம் கற்போம் (ரூ 100) ஆகிய இருநூல்களும் விழா அரங்கில் ரூ. 200க்குக் கிடைக்கும்.
மாலை 6.00 மணிக்கு நாட்டுப்புற இசை -செவ்விசை பாடப் பெறும்.












Click it and Unblock the Notifications