வெளியில் பிதுங்கிய நிலையில் இதயம் - அதிசயக் குழந்தை!
டெல்லி: மார்பு எலும்பு வழியாக இதயம் பிதுங்கி வெளியே வந்த நிலையிலும் 2மாத ஆண் குழந்தை உயிர் பிழைத்திருப்பது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டத்திலிருந்து நீலு என்ற ஆண்குழந்தை, பிறக்கும் போதே எக்டோபியா கார்டிஸ் (ectopia cordis) எனப்படும் இருதய கோளாறுடன் பாதிக்கப்பட்டு டெல்லி அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
பொதுவாக இதுபோன்ற குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் ஆயுள் மிகமிக சொற்பமானதாக இருக்கும்.
ஆனால், நீலு, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டான். இது மருத்துவர்களுக்கு வியப்பளித்தது.
மேலும், நீலுவின் இதயம், மார்புக் கூட்டுக்கு வெளியே பிதுங்கிக் காணப்படுகிறது. இதுகுறித்து கடந்த ஒன்றரை மாதங்களாக நீலுவுக்கு சிகிச்சை அளித்துவரும் 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவுக்கு தலைமை வகிக்கும் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் விகாஸ் கோலி கூறுகையில், நீலுவின் எடை தற்போது சுமாராக 4 கிலோ உள்ளது. அவனுக்கு இன்னும் சற்று எடை கூடும் போது, அதாவது,
6 கிலோ எடையின் போது மற்றொரு அறுவை சிகிச்சை நடத்த உள்ளோம். சிகிச்சை முடிவுகள் நல்ல தகவல்களை தரும் என நம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications