கார்த்திகை- அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்
நெல்லை: கார்த்திகை மாதம் பிறந்ததை ஓட்டி நெல்லை, மேலப்பாளையம் குறிச்சியில் அகல் விளக்குகள் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
50 காசு முதல் ரூ.30 வரையிலான அகல் விளக்குகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வழிபாட்டிக்குக்காக கடைகளில் வாங்கி வருகின்றனர்.
கார்த்திகை மாதத்தில் இந்துகள் தங்கள் வீடுகளில் தீபமேற்றி வழிபாடு செய்வது வழக்கம். இவ்வாண்டு கார்த்திகை மாதம் செவ்வாய்கிழமையில் பிறந்ததால் கடந்த வெள்ளிக் கிழமை முதலே சிலர் தங்கள் வீடுகளில் தீபமேற்றி இறைவழிபாடு நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை மாத பிறப்பை ஓட்டி பலரும் கடைகளுக்கு சென்று வண்ண, வண்ண அகல் விளக்குகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் மேலப்பாளையம் குறிச்சியில் அகல்விளக்குகள் செய்யும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.
காதிகிராப்ட் நடத்தி வரும் மண்சூளைக்கு கீழே குறிச்சியில் பல தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 மில்லி விளக்கு 50 காசுக்கும், 10 மில்லி விளக்கு 65 காசுக்கும், இங்கு உற்பத்தி செய்யப்பட்டு மொத்த விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஐந்து முனைகள் கொண்ட பஞ்சமர விளக்கு ரூ.3க்கும், லட்சுமி, பிள்ளையார் உருவம் பொறிந்த விளக்குகள் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து அகல் விளக்குகளை பெரும் சில்லரை வியாபாரிகள் அதில் வர்ணம் பூசி 5 விளக்கு ரூ.10 என பொதுமக்களுக்கு அளிக்கின்றனர்.
வரும் டிசம்பர் 1ம் தேதி கார்த்திகை தீபதிருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மேலும் அகல்விளக்குகள் விற்பனை சூடு பிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications